Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொன்னமராவதி அருகே ஊராட்சி செயலரை தாக்கியவர் மீது வழக்கு

பொன்னமராவதி, ஏப்.10: பொன்னமராவதி அருகே ஊராட்சி செயலரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர் தெற்கு தெருவைச்சேர்ந்தவர் முருகவேல்(49).இவர் நல்லூர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் நல்லூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த வௌ்ளைச்சாமி மகன் கார்த்தி(37).

இவர் குடிபோதையில் தனது வீட்டிற்கு மட்டும் தண்ணீர் வரவில்லை என கேட்டதாகவும், ஊராட்சி செயலர் சரிசெய்து தருவதாக கூறியுள்ளார். அப்போது இதனை பொருட்படுத்தாமல் கார்த்தி அசிங்கமாக பேசி மார்பில் கைவைத்து கன்னத்தில் அறைந்து விட்டதாக காரையூர் போலீசில் ஊராட்சி செயலர் முருகவேல் புகார் செய்துள்ளார். இதன் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.