Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

பண்ருட்டி, அக். 16: பண்ருட்டி பகுதியில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பண்ருட்டி-சென்னை சாலையில் மேம்பாலம் கீழ், பனங்காட்டு தெரு பகுதியை சேர்ந்த ஹரி(37) என்பவர் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசியுள்ளார்.

இதே போல ரயில்வே ஜங்ஷன் அருகில் பனங்காட்டு தெரு பகுதியை சேர்ந்த ஏழுமலை(38), மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசியுள்ளார்.

புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஹரி, எழுமலை ஆகியோரை கைது செய்தனர். இதே போல புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பனப்பாக்கம் பைபாஸ் சாலையில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக புதுப்பேட்டை மேட்டாமேடு நந்தகோபால் (30) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.