Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரூராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

தொண்டி, ஜூன் 29: தொண்டி பேருராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடற்கரை பூங்கா அமைக்க அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேருராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலி கான் தலைமையில் செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தும், தொண்டியில் மாலை நேரக் கல்லூரி அமைந்திட உதவிய தமிழக முதல்வருக்கும், அழகப்பா கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தும், தொண்டியில் தினசரி சந்தை நடத்திடவும், கடற்கரை பூங்கா அமைத்திடவும் ஒப்புதல் அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை இரு புறமும் உள்ள காட்டு கருவையை அகற்றவும், புதிய மின் விளக்குகள் அமைப்பது, பாவோடி மைதானத்தில் ஆதார் சேவை கட்டிடம் புதிதாக கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. துணைத் தலைவி அழகு ராணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பேருராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.