Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற அழைப்பு

பெரம்பலூர்,மே 20: பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் -2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வைப்புத் தொகை இரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பியவர்கள் முதிர்வுத் தொகை பெற்றுக் கொள்ளலாம். மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின்- 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்புத் தொகை இரசீது பெற்ற பெண் குழந்தைகளில், 18 வயது நிரம்பிய, முதிர்வுத்தொகை பெற வேண்டிய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் களிடம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்கு மாறு கேட்டு கொள்ளப் படுகிறது.

தற்போது முதிர்வுத் தொகை பெற வேண்டி நிலுவையிலுள்ள பயனாளிகளின் விவரம் https://Perambalur.nic.in < https://perambalur.nic.in/ > என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல் பயனாளியின் வங்கிக்கணக்குப் புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் (தாய் மற்றும் மகள் இருவருக்கும்), முதிர்வுத் தொகை கோரி சமர்பிக்கும் பட்சத்தில் முதிர்வுத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். முதிர்வு தொகைக்கு சமர்பிக்கவேண்டிய சான்றுகளும் தவறாமல் அளித்த முதிர்வு தொகையினை பெற்று பயனடையுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.