Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெண்ணை தாக்கிய தம்பதி கைது

திருப்பூர், மே 10: திருப்பூர், வீரபாண்டி, வஞ்சிநகர் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் சுபாஷினி (38). இவர் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவரின் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட ஸ்டிக்கர், டேபிள் போன்ற சில பொருட்கள் கொடுத்துள்ளார். தொடர்ந்து பிறந்தநாள் முடிந்த பின்னர் அந்த பொருட்களை திருப்பி கேட்ட போது மணிகண்டன் மனைவி அர்ச்சணாவுக்கும், சுபாஷினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, மணிகண்டன் மற்றும் அவருடைய தாயார் நாகேஸ்வரி ஆகியோர் சேர்ந்து சுபாஷினியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், சுபாஷினி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் (எ) சைக்கோ மணிகண்டன் (26), அவருடைய மனைவி அர்ச்சணா (23), ஆகியோரை கைது செய்தனர்.