Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பூங்கா பராமரிப்புக்கு நிதி ஒதுக்க மனு

சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை நகராட்சி பூங்கா பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் ஆஷாஅஜித்திடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சிவகங்கை நகராட்சி எல்லைக்குட்பட்ட மருதுபாண்டியர் பூங்காவில் கோடைவிழா சிறப்பாக நடைபெற்றது.

பூங்கா சேதமடைந்து காணப்பட்ட நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைப்படி சிறிய அளவில் மராமத்து பணிகள் நடைபெற்று பொழுது போக்கு அம்சம் நிறைந்த பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவின தொகை ஒப்பந்ததாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட வில்லை. தொகைக்கான மதிப்பீடு நகராட்சி சார்பில் தயார் செய்யப்படும் நிலையில் பில் தொகை வழங்கப்படும். இப்பூங்காவில் மராமத்து செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் அதிக அளவில் உள்ளது. எனவே அதற்கான போதிய நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.