கோவை, மார்ச் 27: கோவை வடவள்ளி போலீசார் கனுவாய் டீச்சர்ஸ் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் அவர் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சபரித் (34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த 328 கிலோ 514 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


