Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலியல் தொல்லை கொடுத்த கணவன், மனைவிக்கு சிறை தண்டனை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ஆற்காடு அருகே 7 வயது சிறுமிக்கு

வேலூர், ஜூலை 13: ஆற்காடு அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன், மனைவிக்கு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கேயன்(36), இவரது மனைவி விஜயலட்சுமி(34). இவர்கள் ஒரு பெட்டிக் கடை வைத்துள்ளனர். இவர்களது கடைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி 7வயது சிறுமி பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது கல்லா பெட்டியில் பணம் திருடிவிட்டதாக கூறி அந்த சிறுமியை கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமி அணிந்து இருந்த ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளனர்.

மேலும் பாலியல் தொல்லை கொடுத்து அதை செல்போனில் போட்டோக்கள் எடுத்துள்ளனர். மேலும் வெளியே சொன்னால் இந்த போட்டோக்களை எல்லோருக்கும் காட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மிரட்டி வந்ததால் பெற்றோரிடம் அந்த சிறுமி நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சிவக்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், தீர்ப்பளித்த நீதிபதி சிவக்குமார், காங்கேயன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் ₹2500 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்தியா வாதாடினார்.