Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்

பாலக்கோடு, ஏப்.5: பாலக்கோடு அடுத்துள்ள கோயிலூரான் கொட்டாய் சுங்கச்சாவடி அருகே, உதவி பொறியாளர் முருகன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி, சோதனை செய்ததில், வெள்ளிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் ஆவணங்கள் இன்றி ₹94,794 எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பாலக்கோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் எழில்மொழி ஆகியோர் முன்னிலையில் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து, பணத்தை பெற்றுக்கொள்ளும்படி மாதேசுக்கு அறிவுரை வழங்கினர்.