Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு

சேந்தமங்கலம், அக்.29: எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோவை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்தும், சுற்றுவட்ட பகுதியான பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, வரகூர், வடவத்தூர், கோணங்கிப்பட்டி, முத்துகாபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று கூடிய சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்தது. சுமார் 3000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், ₹57 லட்சத்திற்கு விற்பனையானது. இதேபோல, 1500க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் ₹3 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தமாக நேற்றைய சந்தையில் ₹60 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.