Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பழநி நகரில் சுற்றி திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்

பழநி, ஜூலை 23: பழநி நகரில் சுற்றி திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பழநி நகராட்சி நிர்வாகம் வெளியிடப்பட்ட அறிக்கை: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாகவும், பொது சுகதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பன்றிகளை வளர்ப்பதும், தெருக்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அவற்றை திரிய விடுவதும் கடுமையான குற்றமாகும்.

எனவே, பழநி நகருக்குள் எவரும் பன்றிகளை வளர்க்கவோ, திரிய விடுவதோ கூடாது. மீறி வளர்க்கப்படும், திரிய விடப்படும் பன்றிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு நகருக்கு வெளியே அப்புறப்படுத்தப்படும். பிடிக்கப்பட்ட பன்றிகளின் மீது எவரேனும் உரிமை கொண்டாடி வந்தால் அவர்கள் மீது தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 உள்ளிட்ட சட்ட விதிகளின்கீழ் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழநி நகரம் கோயில் நகரம் என்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.