Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளி வாகனம் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை, ஜூன் 20: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை நேற்று காலை மேளுடையான்பட்டி, கருப்பட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பள்ளி வாகனம் ஏற்றிச்சென்றது. வாகனத்தை அக்கச்சிப்பட்டி ரவிச்சந்திரன் மகன் ஹரி (22) என்பவர் ஓட்டினார்.

வாகனம் தொண்டைமான் ஊரணி அருகே சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள வையாபுரி குளத்தில் கவிழ்ந்து, குமிழிக்கட்டையில் மோதி சாய்ந்து நின்றது. இதில் வாகனத்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மீட்டு மழையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.