Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பந்தலூர் பஜாரில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, ஜூலை 7: நீலகிரியில் தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு மாடுகளால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானம் வனப்பகுதிகளை ஒட்டியே தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால், காட்டு மாடுகள், புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டு பன்றி போன்ற விலங்குகள் தேயிலை தோட்டங்களுக்குள் வந்து விடுகின்றன. அங்குள்ள பயிர்களை நாசம் செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை தோட்டங்களுக்கு செல்லவிடுவதில்லை.

தற்போது, குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட தேவர்சோலை, தேவபெட்டா, கைகாட்டி, சாம்ராஜ், பெங்கால்மட்டம், மைனலை மட்டம் மற்றும் மெரிலேண்டு போன்ற பகுதிகளில் நாள் தோறும் சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் வந்து விடுகின்றன. இவைகள் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள களைச் செடிகளையும், புற்களையும் உட்க்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அங்கேயே சுற்றி சுற்றி வருகின்றன.

இதனால், அந்த தேயிலை தோட்டங்களுக்குள் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விரட்டுவதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இந்த காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.