Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு: 29ம் தேதி நடைபெறும் என ஆர்டிஓ அறிவிப்பு

பட்டுக்கோட்டை, ஏப்.26: பட்டுக்கோட்டையில் 23ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டு 29ம் தேதி நடைபெற உள்ளது என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23ம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற இருந்தது.

நிர்வாக காரணங்களினால் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வரும் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டத்திற்குட்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.