திருப்பூர் தொழில்துறை சார்பில் கோவை விமான நிலையத்துடன் நிறைவு பெறும் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் நீலாம்பூர் வழியாக முத்துகவுண்டன் புதூர், சாமளாபுரம், பரமசிவம் பாளையம், சின்ன புதூர், பெரியபுதூர், வஞ்சிபாளையம், மங்களம், சுல்தான்பேட்டை, ஆண்டிபாளையம், குமரன் கல்லூரி, ராயபுரம், கருவம்பாளையம், தெற்கு ரோட்டரி, நஞ்சப்பா பள்ளி வழியாக வளர்மதி பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெறும் வகையில் 29 கிலோமீட்டர் தொலைவிற்கு உத்தேச வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பகுதிகள் நொய்யல் ஆற்றங்கரையோரம் வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பட்சத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்படும் தாமதமும் தவிர்க்கப்படும் என அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
+
Advertisement