Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தோகைமலை அருகே அண்ணா பிறந்தநாள் அமமுக பொதுக்கூட்டம்

தோகைமலை, செப்.20: தோகைமலை அருகே அண்ணாபிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பேரூரில் கரூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர்அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பிரபு தலைமை வகித்தார்.

துணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், பொதுக்குழுஉறுப்பினர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தலைமைக்கழக பேச்சாளர் நெல்லை லட்சுமணன் கலந்து கொண்டுபேசினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் புல்லட் சண்முகம், கண்ணன், மணிவேல், ராமன், நகர செயலாளர் பிரகாஷ் உள்படபலர் கலந்து கொண்டனர். இதில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாள ர்வேலுசாமி வரவேற்றுப் பேசினார். பேரூர் ஊராட்சி செயலாளர் தமிழரசன் நன்றி கூறினார்.