Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழிலாளி மீது தாக்குதல் இருவருக்கு வலை

திருச்சி, ஜூலை 8: திருச்சி அருகே தொழிலாளியை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே.கே நகர் அன்பில் தர்மலிங்கம் தெரு பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி (34). வெல்டிங் தொழிலாளியான இவர் கே.கே நகர் பஸ் நிறுத்தம் அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே அடையாளம் தெரியாத 2 நபர்கள் மற்றொரு டூவீலரில் வேகமாக வந்து மோதுவதுபோல சென்றனர். இதையடுத்து லியாகத் அலி அருகில் சென்று ஏன் வேகமாக செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 நபர்களும் லியாகத் அலியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் காயமடைந்த லீயாகத் அலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் கே.கே நகர் போலீசாா் வழக்கு பதிந்து லியாகத் அலியை தாக்கி விட்டு தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாநகர கமிஷனர் ஆய்வு: திருவளர்ச்சோலையில் நேற்று மாலை நடந்த கோஷ்டி மோதலில் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று இரவு 11 மணி அளவில் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், சம்பவம் குறித்து ரங்கம் போலீசாரிடம் கேட்டறிந்து கூடுதல் பாதுகாப்புக்கு போலீசாரை அமர்ந்த அறிவுறுத்தினார்.