Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மானாமதுரை, ஜூலை 5: மானாமதுரையில் உள்ள தெற்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சண்முகராஜா (33). இவர், மானாமதுரை சிப்காட் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் தொழிற்சாலை மேற்கூரையில் நின்று பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சண்முகராஜா, தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சண்முகராஜாவிற்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். மனைவி தற்போது மீண்டும் கர்ப்பமுற்றிருந்த நிலையில் நடைபெற்ற இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.