Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பேற்பு

தேனி, நவ. 16:தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக ஸ்வர்ணம் ஜே.நாகராஜன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பாக சிவகங்கையில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி பணிமாறுதலாகி தேனியில் பொறுப்பேற்றுள்ளார். தேனி மாவட்ட நீதிபதியாகவும், தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தலைவராக நீதிபதி ஏ.கே.கே.ரஜினி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது பணியிட மாறுதலாக தேனி மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு தேனி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவராக கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நீதிபதிகளாக பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதிகளுக்கு சார்பு நீதிபதிகள், மாவட்ட நதுபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, நீதித்துறை நடுவர்கள், வக்கீல்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.