Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

திருவையாறு, ஆக.9: திருவையாறு அருகே விளாங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (34). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் மின் விசிறியை போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் வயரை சொருகினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே மாரியப்பன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சர்மிளா கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீசார் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.