Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவெறும்பூர் அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது

திருவெறும்பூர், ஜூன் 7: திருவெறும்பூர் அருகே வீடு புகுந்து செல்போனை திருடிய வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செர்மராஜ் (48)இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் மேஜையில் செல்போனை ஜார்ஜ் போட்டுவிட்டு வீட்டில் உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது செல் போன் காணவில்லை இது சம்பந்தமாக செர்மராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் பொன்மலை முன்னாள் ராணுவ காலனியைச் சேர்ந்த முகமது நிஷாந்த் (22) என்பவன் தான் வீடு புகுந்து செல்போனை திருடியது தெரியவந்தது. அதனடிப்படையில், அவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவனிடம் இருந்து செர்மராஜ் செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் முகமதுநிஷாந்தை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.