Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பூரில் இலவச மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், ஜூன் 16: ஆத்ம புண்ணியா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் சுகந்தி இலவச மருத்துவமனை நேற்று காதர்பேட்டையில் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து வைத்து ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைத்தார். இதில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ்,ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவச பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. 10 கிலோமீட்டர் தூரம் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும். மருந்துகள் உற்பத்தி விலைக்கு வழங்கப்பட இருக்கிறது.  இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.