Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தளி அருகே சூதாடிய 17 பேர் கைது: 6 டூவீலர்கள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, மே 28: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி எஸ்ஐ ராஜா சங்கிலிகருப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜவளகிரி ஐயப்பன் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர், ஜவளகிரி மல்லேஷ்(45), சிவப்பா(51), ராமச்சந்திரன்(48), கோதண்டராமன்(60), முத்துசெட்டி(80), ஜகநாத்(54), முத்துராஜ்(40). வெங்கடேஷ்(50), முனவர்பாஷா(70), வெங்கடராமன்(61), கார்த்திக்(35), முத்துராஜ்(49), மணி(36), சீனிவாசன்(47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் 2 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், தளி எஸ்ஐ மோகனசுந்தரம் தலைமையிலான போலீசார், சாத்தனூர் ஏரி அருகே ரோந்து சென்றனர். அப்போது, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சானபோகனப்பள்ளி ரகு(45), திருமளிகை ஆனந்த்(36), அனுமப்பா(52) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,500 பணம் மற்றும் 4 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.