சேலம், ஜூலை 6: சேலம் சிவதாபுரத்தில் தம்பதியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் சிவதாபுரம் பெருமாள் கோயில் கரடு பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி சத்யா(39). இவர்களது வீட்டின் அருகே கடந்த மே மாதம் 31ம் தேதி இரவு 4 பேர் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். இதனால் சத்யா அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அங்கு வந்த சாமுவேலும் அந்த வாலிபர்களை கண்டித்தார். அந்த நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டதோடு சாமுவேல், சத்யா ஆகியோரை தாக்கினர். இதில் சாமுவேலுக்கு பல் உடைந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில் தம்பதியை தாக்கியது இந்திரன்(27), ராகுல், சூர்யா உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த இந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
+
Advertisement


