Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டூவீலர் விபத்தில் விவசாயி பலி

தர்மபுரி, ஜூலை 31: மாரண்டள்ளி அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (72), விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் முனிராஜ் நேற்று முன்தினம், அதேபகுதியை சேர்ந்த ஒருவருடன் டூவீலரில் வெளியே சென்றார். அப்போது பெல்ராம்பட்டி- கரிக்குட்டனூர் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக டூவீலர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் முனிராஜ் காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனிராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.