Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டூவீலர்கள் மோதி பெண் பலி 3 பேர் காயம்

நத்தம், மே 28: நத்தம் அருகே டூவீலர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். தம்பதி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

நத்தம் அருகே மேலமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மைதீன்பிச்சை (42). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி அம்சு (38) என்பவருடன் டூவீலரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தார். விளாம்பட்டி பள்ளிவாசல் அருகே வந்த போது இவரது டூவீலரும், கோமணாம்பட்டியை சேர்ந்த தர்மா (42), அவரது அக்கா மீனா (48) ஆகியோர் வந்த டூவீலரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மைதீன் பிச்சை, அவரது மனைவி அம்சு, தர்மா காயமடைந்தனர். இதை கண்ட அ்வ்வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.