Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செல்வவிநாயகர்புரத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள்

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடி செல்வவிநாயகர் புரத்தில் நடந்து வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 14வது வார்டுக்குட்பட்ட செல்வவிநாயகர் புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போதூ மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் காளிதுரை, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.