Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

கண்டமங்கலம், மார்ச் 19: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கோண்டூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சச்சின் (18). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் எப்போதும் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை தந்தை கிருஷ்ணமூர்த்தி பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், சச்சின் அதனை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை போனை பிடுங்கிக் கொண்டார். மனம் உடைந்த சச்சின் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் சச்சினை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி சச்சின் இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.