Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் 13 இடங்களில் ஸ்பா ெசன்டரில் பாலியல் தொழில்: உரிமையாளர் கைது

அண்ணாநகர், ஏப்.27: சென்னையில் 13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்து அதில் பாலியல் தொழில் நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் உடனடியாக அந்த ஸ்பா சென்டரை கண்காணித்தனர். அப்போது, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதியானது. இதையடுத்து ஸ்பா சென்டரில் புகுந்து சோதனை நடத்தி வெளிமாநில பெண்களை மீட்டு, மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதன்பின்னர் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த மேனேஜர் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த, ஸ்பா சென்டர் உரிமையாளரான மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஹேமா ஜுலியோ (50) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், சென்னை முழுவதும் 13க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பா சென்டர் நடத்தி, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.