Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

கூடலூர், ஜூலை 13: தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி ஏர் உழவர் சங்கம் சார்பில், சுருளிப்பட்டி-சுருளி சாலையில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட ஜோடிகள் மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர். இதில் கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தாட்டன்சிட்டு , புள்ளிமான் சிட்டு, இளஞ்கொடி என 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த போட்டியை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். போட்டி சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநில தீர்மான குழு இணை செயலாளர் ஜெயக்குமார், கம்பம் ஒன்றிய திமுக செயலாளர் தங்கபாண்டி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வீரராகவன், கருநாக்க முத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன், திமுக பிரதிநிதி செல்வேந்திரன் வழக்கறிஞர் சிலம்பரசன், ஐடி விங் ரவி, சாப்பிட ஏராளமான கலந்து கொண்டனர்.