Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுமியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

சாத்தூர், பிப். 7: சாத்தூர் அருகே, 17 வயது சிறுமியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தூ அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அவரை சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். சேலத்தில் சிறுமி கணவரோடு நெசவு தொழில் வந்தார்.

இந்நிலையில், பெற்றோர் கடந்த 3ம் தேதி சிறுமி வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமி தனது காதலனோடு செல்போனில் பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த காதலனின் அண்ணன், ‘மீண்டும் ஏன் எனது தம்பியோடு பேசுகிறாய்’ என கேட்டு தகராறு செய்து சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுமி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 வயது வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.