Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாத்தான்குளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

சாத்தான்குளம், ஜூன் 23: சாத்தான்குளம் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ராஜவேல் (48). இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் 21ம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம், மங்களூரில் வீட்டு கட்டுமான பொருட்கள் விற்பனை நடத்தி வந்தார். பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சொந்த ஊர் திரும்பிய அவர் விவசாயம் செய்து வந்தார். இருப்பினும் பொருளாதார நெருக்கடியால் சொத்துக்களை விற்று செலவு செய்து வந்தார்.

இதுதொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விரக்தி அடைந்த ராஜவேல், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் இதுகுறித்த தெரியவந்த உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் விரைந்துவந்த தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார், ராஜவேலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.