Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குரும்பலூரில் வருகிற 11ம்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பெரம்பலூர், ஜூன் 7: குரும்பலூர் (தெற்கு) கிராமத்தில் வருகிற 11 ம்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது- மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுக்கா, குரும்பலூர் (தெற்கு) கிராமத்தில், வருகிற 11ம் தேதி (புதன்கிழமை) மாவட்டக் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் (தெற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக குரும்பலூர் (தெற்கு) கிராம நிருவாக அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.