Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குப்பை கிடங்கில் தீ விபத்து

கடலூர், செப். 11: கடலூர் முதுநகரில் உள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கில தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராயன்பாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மாநகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பை கிடங்கில் எப்படி தீப்பிடித்து, யாரேனும் தீ வைத்து சென்றார்களா? வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.