Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குன்னம் அருகே விஷப்பூச்சி கடித்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

குன்னம், மே. 26: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே விஷப்பூச்சி கடித்து 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தை சேர்ந்த கெங்கடாசலம்-வள்ளியமை தம்பதியின் மகள் தீபிகா, இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து பொது தேர்வில் 284 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது ஏதோ விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது.

உடனே இது குறித்து அவர் தனது, தாய் தந்தையிடம் கூறிய நிலையில் வேப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி செய்து மாணவியை அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார். அதன் பின் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.