Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருமிநாசினி குடித்த மூதாட்டி உயிரிழப்பு

நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் நகராட்சி சின்னமுதலைப்பட்டி கம்ளாய் காலனியை சேர்ந்தவர் லூர்துமேரி (74). இவரது மகன் மயில்சாமி குடும்பத்தினருடன், கடந்த 15ம் தேதி வெளியே சென்று விட்டார். லூர்துமேரி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவர் பழச்சாறு என்று நினைத்து, கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும், கிருமிநாசினி திரவத்தை குடித்து விட்டார். இதில் உடல்நல குறைவு ஏற்பட்ட லூர்துமேரியை, அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று லூர்துமேரி உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.