Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பொன்னமராவதி,மே27: பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோவில் கடந்த மே19ம்தேதி காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மண்டகபடிதாரர்களால் தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.இதில் முத்துமாரியம்மன் கோயிலில் பெண்கள் விரதம் இருந்து முத்துமாரியம்மன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பெண்கள் பால்குடம்,முளைப்பாரி எடுத்து முக்கிய வீதியின் வழியாக வான வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க பால்குடம்,முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு செலுத்தினர்.மேலும் அம்மனுக்கு பால், பன்னீர்,சந்தனம் என பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் காரையூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.