Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

களக்காடு, மே 27: களக்காடு அருகே தோட்டத்தில் தவறுதலாக மின்சார கம்பியில் உடல் பட்ட போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலியானார். களக்காடு அருகேயுள்ள தெற்கு மாவடி மேல தெருவை சேர்ந்தவர் ஏசுதாசன் (60). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஏசுதாசன் அப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் தோட்டத்தில் கம்பு நடும் தொழிலை மூன்று நாட்களாக செய்து வந்தார். ஏசுதாசன் நேற்று முன்தினம் கம்புகளை நட்டு ெகாண்டிருந்த போது திடீரென அங்கு கிடந்த வயர் மீது அவரது கால்பட்டது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலயே ஏசுதாசன் இறந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிந்து ஏசுதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.