Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரூர் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேர் கைது

க.பரமத்தி, ஜூலை 21: கரூர் அருகே அத்திப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள அத்திப்பாளையம் அருகே பொன்னாவரம் பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக அப்பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் பகுதிக்கு சென்ற க.பரமத்தி எஸ்ஐ சந்திரகேரன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த உள்ளூர், வெளியூர் பகுதியினை சேர்ந்தவர்கள் சண்முகம் மகன்முருகேசன்(35), ஈஸவரமூர்த்தி மகன் முருகேசன்(29), ராமசாமி மகன் பிரேம்குமார்(24), மணி மகன் ராஜேஷ்குமார்(35), ராமசாமி மகன் சத்யராஜ்(21), லட்சுமணன் மகன் ராஜ்(60), மற்றும் கார்த்தி மகன் பூபதி ஆகிய 7பேர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது. போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. உடனே 7பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார் 6பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேவல் சண்டைக்கு பயன்படுத்திய 2சேவல்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.600 ஆகியவற்றை க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மேலும் பூபதி என்பவரை க.பரமத்தி போலீசார் தேடி வருகின்றனர்.