Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கருவில்பாறைவலசு குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை

ஈரோடு,மே30: ஈரோடு அடுத்த கருவில்பாறை வலசு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி மூன்றாம் மண்டலத்துக்கு உட்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில், 26.65 ஏக்கரில் குளம் அமைந்துள்ளது.இக்குளம் கருவியல்பாறை வலசு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நிலத்தடி நீராதரமாக உள்ளது.இதன் மூலம், விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் தண்ணீரே தெரியாதப்படி வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.இதனால், குளத்தின் சுற்றுச்சூழல் சமநிலையும், நீர்வரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. நீரின் தரம் குறைந்து, மீன் வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இவை தவிர, ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, கருவில்பாறை வலசு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.