Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கருங்கல் பஸ் நிலையத்தை விரிவாக்க முடிவு பேரூராட்சி தலைவரிடம் வியாபாரிகள் மனு

கருங்கல், ஜூலை 2 : கருங்கல் பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் தற்போது பஸ் நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் வர்த்தகர்கள் மற்றும் கருங்கல் தொழில் வர்த்தகர் சங்கங்களின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் செயல் தலைவர் டேவிட்சன் தலைமையில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜனிடம் வியாபாரிகள் கொடுத்தனர். மனுவில் புதிய கட்டிடம் கட்டப்படும் வரை பேரூராட்சியில் காலியாக உள்ள கடைகளை குறைவான வாடகைக்கு பாதிக்கப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும் புதிய கட்டிடம் கட்டி முடிந்த பின் ஏற்கனவே கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு கொடுக்க வேண்டுமென கேட்டு கொண்டனர். நிகழ்சியில் குமரி மேற்கு மாவட்ட தலைவரும், குழித்துறை நகர்மன்ற தலைவருமாகிய பொன் ஆசைத்தம்பி, கருங்கல் தொழில் வர்த்தகர் சங்க செயலாளர் தாமஸ், துணை தலைவர் ராஜேஸ், செயலாளர்கள் ரமேஷ் வர்கீஸ், குமாரவேல், ஜெனோ உட்பட சங்க நிர்வாகிகள் , வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.