Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ரூ.28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர். மே 25: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த ஆடு, கோழிகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், இறைச்சிக்கடைக்காரர்கள் வந்திருந்தனர். இந்தவார சந்தையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி, சேவல்கள் விற்பனைக்கு வந்திருந்தது. சந்தையில் ஆடுகள் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9,700 வரையும், நாட்டுக்கோழி, சேவல் விலை ரூ.300 முதல் ரூ.900 வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ரூ.28 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.