Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடையம் அருகே தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்

கடையம்,செப்.19: புரட்டாசி பவுர்ணமியையொட்டி கடையம் அருகே தோரணமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடந்துவருகிறது. அதன்படி புரட்டாசி பவுர்ணமியையொட்டி உலக நன்மை வேண்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கி.மீ. தொலைவிலான கிரிவல பாதையில் கிரிவலம் செய்தனர். தொடர்ந்து உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன்

செய்திருந்தார்.