Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கஞ்சா விற்ற 13 பேர் கைது

தர்மபுரி, மே 24: மாரண்டஅள்ளி எஸ்ஐ தணிகாசலம் மற்றும் போலீசார், ஆலமாரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்ததில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மாரண்டஅள்ளி மாரப்பன் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சக்திவேலுவை போலீசார் கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையிலடைத்தனர். இதேபோல், தர்மபுரி எஸ்ஐ வெங்கடேஸ்குமார் மற்றும் போலீசார், பிடமனேரி ஏரிக்கரையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டு இருந்த, குமாரசாமிபேட்டையை சேர்ந்த பிரகாஷ்(27) என்பரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு பதுக்கிய 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்றதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.