Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கஞ்சா விற்றவர் கைது

வேடசந்தூர், ஏப். 26: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசாருக்கு வேடசந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கம்பட்டி தனியார் நூற்பாலை அருகே அரியபித்தம்பட்டியை சேர்ந்த நீலக்கண்ணன் (50) என்பவர் இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதத்திடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா சப்ளை செய்த வடமாநில நபர் தப்பி விட்டார். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த யசோபந்த் சகோ என்பதும், அவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி தனியார் நூற்பாளையில் பணிபுரியும் வடமாநில நபர்களுக்கு விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் நீலகண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். தப்பிய யசோபந்த் சகோவை தேடி வருகின்றனர்.