Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.6 உயர்ந்து ஏலம்

க.பரமத்தி, ஜூன் 11: கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புன்னம், தென்னிலை, துக்காச்சி ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராமப்புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலை தேவை அதிகரிப்பால் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு விவசாய நிலத்திலேயே கொள்முதல் செய்வார்களாம் தற்போது வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் கடலையை காயவைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடந்த ஏலத்தில் 260 மூட்டை எடைக்காக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு குறைந்த பட்சமாக ரூ.70க்கும், அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.6 உயர்ந்து ஏலம் போனது.