Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரயாங்குப்பம், செஞ்சி பானம்பாக்கம், காவாங்கொளத்தூர், சத்தரை, வயலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிரயாங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-25ன் கீழ் ரூ.6.4 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், செஞ்சிபானம்பாக்கம், சத்தரை ஆகிய ஊராட்சியில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் 66 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்தும்,

காவாங்கொளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் பிலிப்ஸ்புரம் - வேப்பஞ்செட்டி வரை சாலை பணிகள் குறித்தும் வயலூர் ஊராட்சியில் சூரகாபுரம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.42 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை பணியை பார்வையிட்டு தடுப்பணைக்கு வரத்து குழாயை சீரமைத்து சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கவுசல்யா, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, சவுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.