மல்லசமுத்திரம், ஜூலை 7: மல்லசமுத்திரம் கால்நடை மருந்தகத்தில் நேற்று, உலக விலங்கின நோய்கள் தினத்தை முன்னிட்டு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கால்நடை மருத்துவர்கள் விஜயமூர்த்தி, ஸ்ரீதரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், மணிகண்டன், சந்திரசேகர், பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


