Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உடல்நலக்குறைவால் விவசாயி தற்கொலை

போடி, மே 19: தேனி மாவட்டம், போடி அருகே, குரங்கணியை அடுத்துள்ள நரிபட்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (50). விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் முருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த முருகன், நேற்று முன் தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இது குறித்து குரங்கணி காவல் நிலைய எஸ்.ஐ.செல்லப்பாண்டி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.