Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Wednesday, August 13 2025 Epaper LogoEpaper Facebook
Wednesday, August 13, 2025
search-icon-img
Advertisement

ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

ஈரோடு, மே 29: பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து, ஈரோட்டில் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துணை ஆணையர் தனலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். ஈரோடு மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட ரயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரூ.61.5 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, 60வது வார்டுக்குட்பட்ட மோளக்கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ரூ.52.5 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை முடிந்து, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படுவதால், கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி நேற்று நேரில் ஆய்வுக் கொண்டார். அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, உதவி ஆணையர் லதா, உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், இளநிலை பொறியாளர் செந்தாமரை, சுகாதார ஆய்வாளர் நல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.